"உங்கள் பொக்கிஷமுள்ள இடத்தில் உங்கள் இருதயமும் கூட இருக்கும்." (அர்ச். லூக்கா 12:34) அவரவர்கள் பொக்கிஷமுள்ள இடத்தில் அவரவர்கள் ஆசையும், பட்சமும் இருக்கிறதென்று சேசுநாதர் தாமே திருவுளம்பற்றி இருக்கிற தினால், சேசுநாதரைத் தங்கள் மேலான பொக்கிஷமென்று எண்ணுகிற புண்ணிய ஆத்துமாக்கள் தங்கள் ஆசைப்பட்ச மெல்லாம் தேவநற்கருணையின் பேரில் வைக்கிறார்கள்.
செபம்:
என்மேல் வைத்த சிநேகத்தால் இரவும் பகலும் பீடத்தில் எழுந்தருளியிருக்கத் திருவுளமான என் சிநேக தேவனே! நான் உமது சிநேகத்தை மாத்திரமே நினைக்கவும், உம்மை மாத்திரமே ஆசிக்கவும், உமது சிநேக பாசத்தால் என்னை உமது அருகில் சேர்த்தருளும். நீர் எனக்காகப் பாடுபட்டு அடைந்த பேறுகளைப் பார்த்து, எனக்கு இந்த மன்றாட்டைத் தந்தருளுவீர் என்று நம்பியிருக்கிறேன். என் இரட்சகரே, என் ஆத்தும நேசரான பத்தாவே, நான் உம்மை நேசிக்க வேண்டுமென்று நீர் என்னை எவ்வளவு அன்பாய் அழைக்கிறீர். நித்திய வார்த்தையே, நீர் எங்களுக்காக மனிதனாகப் பிறக்கவும், பாடுபட்டு மரிக்கவும் திருவுளமானதும் அல்லாமல், எங்களுக்குத் துணையாயிருக்கவும், எங்கள் போசனமாகவும், இனி நாங்கள் அடையப் போகிற மோட்சத்தின் அச்சாரமாகவுமிருக்கத் திருவுளமானீர். எங்களுக்கு உமது மேல் உருக்கம் வரும்படி மாட்டுக் கொட்டிலில் குழந்தை உருவாகவும், தச்சர் கூடத்தில் வேலைக்காரனாகவும், கழுமரத்தில் குற்றவாளியாகவும், பீடத்தில் அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும் காணப்படுகிறீர். நாங்கள் உம்மைச் சிநேகிக்க நீர் இன்னும் செய்ய வேண்டியதென்ன? மட்டற்ற நேசமே, உம்மை நான் வேண்டிய படி எப்போதும் நேசிப்பேன். என் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்க மாத்திரமே உயிர் அடைந்திருக்க ஆசைப்படுகிறேன். என் மதுரமுள்ள இரட்சகரே, உமது உயிரை முழுதும் நீர் எனக்காகப் பலி கொடுத்திருக்கையில், என் ஆவி முழுதும் உம்மை நேசிக்கவும், உமக்குப் பிரியப்படவும் உதவாவிட்டால், நான் உயிரோடிருந்தும் பிரயோசனமென்ன? ஆண்டவரே, நீர் மட்டற்ற சிநேகமுமாய், அளவற்ற சிநேகத்திற்குப் பாத்திரமானவருமாய் ரூபலாவண்ய அலங்காரமுமாய் நன்மையுள்ள மதுரமுமாயிருக் கையில், நான் உம்மை நேசிக்காமல் வேறு என்னத்தை நேசிக்கப் போகிறேன்! என் ஆத்துமம் உம்மையே நேசித்துச் சீவிக்கக் கடவது. நான் உமது பேரில் வைக்கும் சிநேக உருக்கத்தால் மாட்டுக் கொட்டில், தச்சர் கூடம், சிலுவைமரம், தேவநற்கருணை என்கிற குரல் என் காதில் விழும்போது, என் உள்ளம் உருகக்கடவது. சேசுவே! நீர் எனக்காக இத்தனை மகா அரிதான காரியங்களைச் செய்ததினால், உமக்காக நானும் அரிதான காரியங்களைச் செய்ய ஆசைப்படுவேனாக.
மனவல்லயச் செபம்:
ஆண்டவரே! என் ஆவி பிரியும் முன், நான் ஏதாகிலும் உமக்காகச் செய்யக் கிருபை செய்தருளும்.
தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:
நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்.
தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.
சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.
பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)
நிந்தை பரிகாரச் செபம்:
எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.
தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.