28, பரலோக பிதா தமக்குள்ளதெல்லாம் தமது ஏகசுதனுக்குத் தந்தருளினார்!

அர்ச். அருளப்பர் நற்செய்தி: 13 ம் அதிகாரத்தில் எழுதியுள்ளது போல், "பரலோக பிதா தமக்குள்ளதெல்லாம் தமது ஏகசுதனுக்குத் தந்தருளினார் என்கிறதினால், தமது ஏக சுதனைத் தானே நமக்குத் தந்த பிதாவானவர், மற்றெந்தப் பொருளை நமக்கு இல்லை யென்பார்" என்று அர்ச் சின்னப்பர் உரோமையருக்கு எழுதின நிருபத்தில் 8ம் அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார். தேய நற்கருணை வழியாய்த் தமது ஏகசுதனை நமக்குத் தந்து, நம்மைச் சகல இஷ்டப்பிரசாத நன்மைகளினால் அலங்கரித்து மகா திரவிய சம்பன்னராகத் திருவுளமாயிருக்கிற நமது ஆண்டவருடைய நன்மையையும் இரக்கத்தையும் உதாரத்தையும் வணங்கித் தோத்தரிப்போமாக.

செபம்

உலகத்தை மீட்டு இரட்சித்த கர்த்தாவே! மனித சுபாவத்தை ஏற்றுக்கொண்ட திவ்விய வார்த்தையான தேவசுதனே! வேண்டுமென்றால் நீர் முழுதும் எனக்குச்சொந்தமாயிருப்பதும் போல, நீர் மகா அன்போடு தேடியும் நான் முழுதும் உமக்குச் சொந்தமாயிருக்கிறேனென்று சொல்லக்கூடுமோ? ஆண்டவரே! நான் வேண்டுமென்கிறமட்டும் நீர் எனக்குச் சொந்தமாயிருக் கிறதையும், நீர், ஆ சித்தும், நான் முழுதும் உமக்குச் சொந்த மில்லாதிருக்கிறதையும், உலகம் கண்டு இகழ்ச்சி செய்யாதபடி வேண்டிய பரிகாரம் செய்யும். இதுவரை இப்படிப்பட்ட மாறுபாடு நடந்துவந்தாலும், இனி ஒருபொழுதும் இப்படிப்பட்ட மாறுபாடு நடவாமல், என் சிந்தனை, வாக்கு, கிரியையும், நான் அனுபவிக்கும் துன்ப துரிதங்களையும், என் உயிரையும் தானே அநித்தியத்திலும் நித்தியத்திலும் உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறேன் சிருஷ்டிக்கப்பட்ட பொருட்கள் என்னிடத்தில் ஒன்றுமில்லாமல் போகும்படி, என்னை உமது . சிநேக அக்கினியால் தகனம் செய்தருளும். நான் உம்மை நேசிக்காதபோது நீர் என்னை நேசித்துச் செய்துவந்த காரியங்களைப் பார்க்குமிடத்தில், இப்போது நான் உம்மை நேசித்து, உமது சிநேகத்திற்கு என்னை தானே பலியாக ஒப்புக்கொடுக்குமிடத்தில், நீர் என்னை புறக்கணித்துத் தள்ளிவிடமாட்டீர் என்று நம்பியிருக்கிறேன். நித்திய பிதாவாகிய சர்வேசுரா! உமது மகா நேசமுள்ள திருக்குமாரன் அனுபவித்த கஸ்தி, துன்பம், துரித நிர்ப்பந்த வேதனைகளை எல்லாம், என் பாவத்திற்கு ஈடாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அவர் எனக்காகப் பேறுபெற்ற பலன்களை என் பாவதோஷத்திற்கு உத்தரிப்பாகவும், நீர் எனக்குச் செய்துவரும் மட்டில்லாத உபகாரத்திற்கு நன்றியறிந்த தோத்திரமாகவும் ஒப்புக்கொடுக்கிறதும் அல்லாமல், அவருடைய பேறுகளைப் பார்த்து, அவர் எனக்காகத் தேவரீரை மன்றாடும் இஷ்டப்பிரசாத நன்மைகளைத் தந்தருளும். சேசு கிறிஸ்துவின் பேறுபலன்களைப் பார்த்து, நீர் எனக்குப் பாவப் பொறுத்தலும் இஷ்டப்பிரசாத நன்மையும் மரணபரியந்தம் புண்ணியவழியில் நடக்கத்திடனும் தந்தருளுகிறதுமல்லாமல், மோட்ச ஆனந்த பாக்கியமும், விசேஷமாய் உமது நிர்மல தேவ சிநேகமும் தந்தருளுவீர் என்றும் நம்பியிருக்கிறேன். உம்முடைய திருக்குமாரன் திரு நாமத்தால் நாங்கள் உம்மைக் கேட்கும் மன்றாட்டைத் தப்பாமல் அடைவோமென்று சத்திய சுரூபியா யிருக்கிற உமது திருக்குமாரன் தாமே திருவுளம் பற்றியிருக்கிற தினால், தேவரீர் அடியேனுக்குச் செய்யவிருக்கிற நன்மைகளுக்கு, என்னாலேதானே விக்கினம் வராதபடி உம்முடைய திருக்குமாரன் முகத்தைப்பார்த்து, என்னைக் காத்து இரட்சிக்கவேண்டுமென்று மன்றாடுகிறேன். ஆண்டவரே! நான் இதுவரை தேவரீருடைய உபகாரங்களை மறந்து நன்றிகெட்டவனாயிருந்தது போல, இனிமேலும் இராதபடி பாவியாகிய என்னை முழுதும் தேவரீருக்கே தத்தம் செய்யவும், உம்மை முழுமனதோடு நேசிக்கவும் விரும்புகிற என்னை உமது கிருபாகடாக்ஷத்தால் திரும்பிப் பார்த்து, என் மன்றாட்டுக்குத் திருச் செவி கொடுத்தருளும். என் சர்வேசுரா! என் பாக்கியமே! என் சந்தோஷமே! என் ஆருயிரே! என் மோட்ச ஆனந்தமே! என் சிநேகமே! இந்த க்ஷணந் துவங்கி இனி எப்போதும் இடைவிடாமல் உம்மை நான் நேசிக்கும்படி என் இருதயத்தை உமது வசமாக்கியருளும்.

மனவல்லயச் செபம்: 

சேசுவே! நீர் என்னைக் கைக்கொள்ள ஆசைப்படுகிறீர், நான் உம்மை மாத்திரமே அடைய ஆசைப்படுகிறேன்.

தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:

நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன். 

தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.

சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.

பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)

நிந்தை பரிகாரச் செபம்:

எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.

தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.